தினமணி 06.06.2013
சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திட்டம் தொடக்கம்
காஞ்சிபுரம் நகராட்சியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டத்தை புதன்கிழமை அமைச்சர் டி.கே.எம். சின்னையா தொடங்கி வைத்தார்.
- தமிழகத்திலேயே முதன்முறையாக இத்திட்டம் காஞ்சிபுரத்தில் செயல்படுத்தப்பட்டுள்ளது.
- காஞ்சிபுரம் நகராட்சியில் 2.32 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர்.
- இங்குள்ள மக்களின் குடிநீர் தேவைக்காக வேலூர் மாவட்டம் திருப்பாற்கடல் மற்றும் ஓரிக்கை பகுதிகளில் பாலாற்று படுகையிலிருந்து குடிநீர் கொண்டு வரப்படுகிறது.
கழிவுநீர் கலப்பு:
- இந்நிலையில், ராணிப்பேட்டையை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள தோல் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், பாலாற்றில் கலந்து குடிநீர் மாசுப்படத் தொடங்கியது.
சுத்திகரிப்பு நிலையம்:
- இதனால் திருப்பாற்கடல் குடிநீரை சுத்திகரிக்க குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டது.
- இதனைத்தொடர்ந்து மத்திய அரசின் சமூக பொறுப்பு திட்டத்தின் கீழ், இத்திட்டத்தை செயல்படுத்த ரூ.85 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
- இதன்படி, காஞ்சிபுரம் நகராட்சிக்கு உட்பட்ட பிள்ளையார்பாளையம் மண்டபம் தெருவில், இக்குடிநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்கப்பட்டது.
- இதன் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் லி. சித்ரசேனன் தலைமை வகித்தார்.
- அமைச்சர் டி.கே.எம்.சின்னய்யா திட்டத்தை தொடங்கி வைத்தார்.
- சட்டப்பேரவை உறுப்பினர்கள் வி. சோமசுந்தரம், வாலாஜாபாத் பா. கணேசன், மாவட்ட ஊராட்சித் தலைவர் பன்னீர்செல்வம், நகர்மன்றத் தலைவர் மைதிலி திருநாவுக்கரசு உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.