தினத்தந்தி 17.02.2014
66 யாக குண்டம் வளர்த்து வேள்வி வழிபாடு-நலத்திட்ட உதவிகள் மேயர் செ.ம.வேலுச்சாமி வழங்கினார்

முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி கோவை மாநகர் மாவட்ட
அ.தி.மு.க. சார்பில் 66 யாக குண்டம் வளர்த்து வேள்வி வழிபாட்டு விழாவும்,
நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் மேயர்
செ.ம,வேலுச்சாமி கலந்து கொண்டு நலத் திட்ட உதவிகளை வழங்கினார்.
ஜெயலலிதா பிறந்த நாள் விழா
தமிழக முதல்-அமைச்சரும், அ.தி.மு.க பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின்
66-வது பிறந்த நாள் விழா நலத்திட்ட உதவிகளுடன் தமிழகம் முழுவதும்
கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை மாநகர் மாவட்ட அ.தி.மு.க.
32-வது வார்டு சார்பில் வருகிற பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று
இந்தியாவை தலைமையேற்று வழிநடத்தும் அதிகாரம் பெற்றிட முதல்- அமைச்சரின்
பிறந்தநாளான மகம் நட்சத்திரத்தில் கோவை விளாங்குறிச்சி சேரன்மாநகரில் உள்ள
மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் 66 யாக குண்டங்களை அமைத்து தமிழில் வேள்வி
வழிபாட்டு நிகழ்ச்சி நேற்றுக்காலை 7 மணிக்கு தொடங்கியது.
இதையொட்டி கோவில் வளாகத்தில் பிரமாண்டமான பந்தல் அமைக்கப்பட்டு அதில்
யாகசாலை அமைக்கப்பட்டிருந்தது. 66 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு அவற்றுக்கு
வர்ணங்கள் தீட்டப்பட்டிருந்தன. அவற்றை சுற்றி முளைப்பாரி
வளர்க்கப்பட்டிருந்தது.காலை 7 மணிக்கு கணபதி ஹோமத்துடன் வேள்வி
வழிபாட்டுக்கு கிழக்கு மண்டல தலைவர் கே.ஆர்.ஜெயராம் முன்னிலை
வகித்தார்.இதைதொடர்ந்து மேயர் செ.ம.வேலுச்சாமி குத்து விளக்கேற்றி யாக
வேள்வி பூஜையை தொடங்கி வைத்தார்.இதில் புறநகர் மாவட்ட செயலாளர்
எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ., கலந்து கொண்டார்.
66 யாக குண்டங்கள்
அதன் பின்னர் 100 சிவனடியார்கள் 66 குண்டங்களை வளர்த்து
திருஞானசம்பந்தர் பாடிய கோளாறுபதிகம் பாடினார்கள்.அதைதொடர்ந்து காலை 7 மணி
முதல் மதியம் 1 மணி வரை 11 வேள்விகள் நடத்தப்பட்டன.அதை தொடர்ந்து வேள்வி
யாக சாலையில் வைக்கப்பட்ட 2 திருக்குடங்களை மேயர் செ.ம.வேலுச்சாமியும்,
கிழக்கு மண்டல தலைவர் கே.ஆர்.ஜெயராமும் தலையில் சுமந்து கோவிலை சுற்றி வலம்
வந்தனர்.அதில் உள்ள புனித நீரை கொண்டு மீனாட்சி சுந்தரேசுவரருக்கு
நீராட்டு நடைபெற்றது.பின்னர் பூஜைகள் செய்யப்பட்டன.
யாக குண்டம் வேள்வி வழிபாடு முடிவடைந்ததும் நலத்திட்ட உதவிகள் வழங்கும்
நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு 6 இரு சக்கர
தள்ளுவண்டிகளும், சி 66 ஆதரவற்ற பள்ளி குழந்தைகளுக்கு வண்ண சீருடைகளும், 66
கல்லூரி மாணவர்களுக்கு ஹெல்மெட்டும்,66 கிரிக்கெட் குழுவிற்கு விளையாட்டு
உபகரணங்கள் உள்பட 2 ஆயிரம் பேருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை மேயர்
செ.ம.வேலுச்சாமி வழங்கினார். அதைத் தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.
கலந்து கொண்டவர்கள்
இந்த நிகழ்ச்சிகளில் ஏ.கே.செல்வராஜ் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள்
ஆர்.சின்னசாமி, ஓ.கே.சின்னராஜ், துணைமேயர் லீலாவதி, மண்டல தலைவர்கள்
கணபதிராஜ்குமார், சாவித்திரி பார்த்தீபன், பி.ஆர்.ஜி. அருண்குமார், குழு
தலைவர்கள்அம்மன்அர்ஜுன்,பிரபாகரன், வக்கீல்ராஜேந்திரன்,சாந்தாமணி மற்றும்
சாரமேடு பெருமாள், கவுன்சிலர்கள் சிங்கைபாலு, வெண்தாமரைபாலு,
எஸ்.ஆர்.அர்ஜுனன், சால்ட்வெள்ளிங்கிரி, வீரகேரளம் மயில்சாமி,செந்தில்
என்கிற கார்த்திகேயன், ஏகாம்பரம், தமிழ்மொழி,ஜெயந்தி, குணசுந்தரி, நடராசன்,
மாரப்பன், முத்துசாமி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கே.பி.ராஜு, மருதாசலம்,
நா.கருப்பசாமி, சி.டி.சி. கருணாகரன், வக்கீல் கள் ஆறுமுகம், நாகராஜ்,
பாலகிருஷ்ணன், எஸ்.பி.சந்திரசேகர், அகஸ்டஸ்,ஆர்.சரோஜினி, பீளமேடு
துரை,எஸ்.எஸ்.குளம் ஒன்றிய செயலாளர் ஜி.சுப்பிரமணியன்,கள்ளிப்பாளையம்
ஊராட்சி செயலாளர் செந்தில் என்கிற கோவிந்தராஜன், மற்றும் சக்கரையப்பன்,
வெள்ளானைப்பட்டி ராசு, அருண்குணாளன், ஆனந்தி கோவிந்தராஜன் , சங்கர் பிரபு,
புத்தா செந்தில்,தம்பி என்கிற சண்முகசுந்தரம், கோல்டுவின்ஸ் ஜி.எஸ்.ரகுபதி,
கணபதி க.ஜெயபிரகாஷ், எஸ்.விவேகானந்தன், சம்சுதீன், எஸ்.சண்முவடிவேல்,
ஆர்.மாணிக்கம், பி.கே.சீனிவாசன்,சேரன்மாநகர் ராஜசேகர்,கேபிள்பஷீர் உள்பட
ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.