காய்ச்சல் விடுப்புமாணவர்களின் தகவலை மாநகராட்சிக்கு தெரிவிக்கவும்
காய்ச்சல் விடுப்பு எடுக்கும் மாணவர்கள் குறித்த விவரங்களை மாநகராட்சிக்கு பள்ளி, கல்லூரி நிர்வாகங்கள் உடனடியாகத் தெரிவிக்க வேண்டும் என ஆணையர் வே.ப. தண்டபாணி அறிவுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
திருச்சி மாநகராட்சியின் 65 வார்டுகளிலும் கொசு ஒழிப்புப் பணிகள் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மாநகரிலுள்ள பள்ளி, கல்லூரி நிறுவனங்கள் தங்கள் வளாகங்களில் கொசு உற்பத்தியாகும் பொருள்களை அழிக்க முன்முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
அத்துடன், மாணவர்கள் காய்ச்சல் என விடுப்பு எடுத்தால் அதுகுறித்த விவரங்களை உடனடியாக மாநகராட்சிக்கு தெரிவிக்க வேண்டும். அப்போதுதான் அந்த மாணவரை மாநகராட்சி டாக்டர்கள் நேரில் சந்தித்து ஆய்வு செய்து டெங்குவாக இருப்பின் சம்பந்தப்பட்ட வசிப்பிடங்களில் கொசு உற்பத்திக்கு சிறப்பு நடவடிக்கை எடுக்கவும் முடியும்.