தினமணி 08.04.2010
காலாவதியான குளிர்பானம் பறிமுதல்
விருத்தாசலம், ஏப். 7: விருத்தாசலத்தில் காலாவதியான குளிர்பானங்களை நகராட்சி சுகாதார அலுவலர்கள் புதன்கிழமை மாலை பறிமுதல் செய்தனர்.
÷விருத்தாசலம் பஸ் நிலையம், ஜங்ஷன் சாலை ஆகிய இடங்களில் உள்ள கடைகளில் காலாவதியான குளிர்பானங்கள் இருக்கிறதா என்பது குறித்து நகராட்சி துப்புரவு அலுவலர் பரமசிவம் தலைமையில், ஆய்வாளர்கள் பாலமுருகன், ராஜ்குமார், சிவப்பிரகாசம், மேற்பார்வையாளர்கள் முத்தமிழன், ஆறுமுகம், செல்வம் மற்றும் சுப்பிரமணியன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
÷அப்போது பல்வேறு கடைகளில் காலாவதியான குளிர்பானங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அவை பறிமுதல் செய்யப்பட்டன.