தினமலர் 20.04.2010
திருமூர்த்தி அணை படகு சவாரியில் ‘லைப்ஜாக்கெட்‘ அணிந்து செல்லணும் : தளி பேரூராட்சி உத்தரவு
உடுமலை: ‘திருமூர்த்தி அணையில் படகு சவாரி மேற்கொள்ளும் பயணிகள் லைப்ஜாக்கெட் அணிந்த பிறகே படகு இயக்க வேண்டும்,’ என படகு இயக்குபவர்களிடம் தளி பேரூராட்சி நிர்வாகத்தினர் அறிவுறுத்தியுள்ளனர். உடுமலை அடுத்துள்ள திருமூர்த்திமலை சிறந்த சுற்றுலா தலமாக உள்ளது. திருமூர்த்தி மலைக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் அணையின் அழகை கண்டு ரசிக்கும் வகையில், தளி பேரூராட்சி சார்பில் ஒரு படகு சவாரி துவக்கப்பட்டு; சுய உதவி குழுக்கள் மூலமாக இயக்கப்படுகிறது. படகில் பயணம் செய்யும் பயணிகளின் பாதுகாப்பிற்காக ‘லைப்ஜாக்கெட்‘ வழங்கப்பட்டது. ஆனால் சுற்றுலாப்பயணிகள் ஆர்வ மிகுதியில், ‘ஏர்ஜாக்கெட்‘ அணியாமலேயே பயணம் மேற்கொள்கின்றனர். இதனால், விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, ஏர்ஜாக்கெட் அணியாமல் பயணிகள் பயணிக்க அனுமதிக்க கூடாது என கோரிக்கை எழுந்துள்ளது. தளி பேரூராட்சி அதிகாரிகள் கூறியதாவது: பயணிகள் பாதுகாப்பிற்காக ‘லைப்ஜாக்கெட்‘ வழங்கப்பட்டது. ஆனால், பயணிகள் ஏர்ஜாக்கெட் அணியாமல் பயணம் மேற்கொள்வதாக தகவல் வந்தது. லைப்ஜாக்கெட் அணியாமல் பயணிகள் பயணம் மேற்கொள்ள அனுமதிக்க கூடாது; பயணம் செய்வதற்கு முன்பாகவே பாதுகாப்பு கவசத்தை பயணிகளுக்கு வழங்க வேண்டும் என படகு இயக்குபவர்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், குறிப்பிட்ட அளவை விட அதிகளவு நபர்களை ஏற்றி படகு இயக்க கூடாது ;’போட்‘ களில் ஏறும் பயணிகள், நிற்க கூடாது; அமர்ந்தே இருக்க வேண்டும், தண்ணீருக்குள் கை விட கூடாது என பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. பயணிகளின் உயிர்களுக்கு உத்திரவாதத்துடன் உரிய அரசு விதிகளை பின்பற்றி பாதுகாப்புடன் பயணம் மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு தளி பேரூராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர