தினமணி 17.05.2010
உயர் மின் கோபுர விளக்குகள் இயக்கிவைப்பு
சிவகாசி, மே 16: சிவகாசி நகராட்சி சார்பில், தலைமை அஞ்சல் நிலையம் முன், டாக்ஸி ஸ்டாண்ட் அருகில் என இரு இடங்களில் உயர் மின் கோபுர விளக்கு அமைக்கப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை நடைபெற்ற இதன் இயக்க விழாவிற்கு, நகர்மன்றத் தலைவர் ராதிகாதேவி தலைமை வகித்தார். துணைத் தலைவர் ஜி.அசோகன் முன்னிலை வகித்தார். மாவட்ட காங்கிரஸ் தலைவர் கணேசன் விளக்குகளை இயக்கிவைத்தார்.
நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) முருகன், சுகாதார அலுவலர் பாலசுப்பிரமணியன் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.