குடிநீர் வழங்க நடவடிக்கை: நகர்மன்றத் தலைவர்
ஆம்பூர், ஆக. 11: ஆம்பூர் நகர மக்களுக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நகர்மன்றத் தலைவர் வாவூர் நசீர் அஹமத் தெரிவித்தார்.
இது குறித்து செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
சாரங்கல் ஆற்றுப் பகுதியில் அமைந்துள்ள ஆம்பூர் நகராட்சிக் கிணறுகள் வறண்டு போயுள்ளது. அவற்றை தூர்வாரும் பணி தற்போது நடந்து வருகிறது. மேலும் ஒரு நாளைக்கு டிராக்டர்கள் மூலம் 80 லோடு தண்ணீர் ஆம்பூர் நகர மக்களுக்கு வழங்கப்படுகிறது. வருகின்ற 3 மாதத்திற்கு டிராக்டர் மூலம் குடிநீர் வழங்கப்பட உள்ளது.
வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் கூடுதல் நிதி கோரப்பட்டுள்ளது. நிதி கிடைத்த உடன் குடிநீர் தட்டுப்பாடின்றி வழங்கப்படும் என்றார் அவர்.