Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கொடி நாள் வசூலில் சாதனை புரிந்த மாநகராட்சி ஆணையருக்கு நற்சான்று

Print PDF

தினமணி 14.08.2009

கொடி நாள் வசூலில் சாதனை புரிந்த மாநகராட்சி ஆணையருக்கு நற்சான்று

திருச்சி, ஆக. 12: முன்னாள் படைவீரர் மற்றும் அவரைச் சேர்ந்தவர்களின் நலனுக்கான 2007-ம் ஆண்டு கொடி நாள் நிதி வசூலில் சாதனை புரிந்த திருச்சி மாநகராட்சி ஆணையர் த.தி. பால்சாமிக்கு தமிழக ஆளுநரின் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

மாநகராட்சிக்கு அரசு நிர்ணயம் செய்த இலக்கு ரூ. 6,81,000. ஆணையர் முனைப்புடன் செயல்பட்டு ரூ. 7,10,000 வசூலித்துள்ளார்.

இச்சான்றை திருச்சி மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் க. ராசப்பா, ஆணையரிடம் நேரில் வழங்கினார்.