தினமலர் 21.10.2010
குற்றாலத்தில் நாளைபூங்கா திறப்பு விழா
குற்றாலம்:குற்றாலத்தில் நாளை (20ம் தேதி) சுற்றுலா வரவேற்பு மையங்கள், வைரம்ஸ் நகர் பூங்கா திறப்பு விழா நடக்கிறது.நெல்லை மாவட்டத்தில் மிகவும் புகழ்பெற்ற சுற்றுலாதலமான குற்றாலத்திற்கு வருகை தரும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகையை கருத்தில் கொண்டு குற்றாலம் டவுன் பஞ்., மற்றும் சுற்றுலா வளர்ச்சித்துறை மூலம் பலகோடி மதிப்பில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது.குற்றாலநாதர் ரோடு அலுவலகம் அருகே ரூ.20 லட்சத்தில் சுற்றுலா வரவேற்பு மையம், ஐந்தருவி பகுதியில் 13.74 லட்சத்தில் சுற்றுலா வரவேற்பு மையம், வைரம்ஸ் நகரில் ரூ.7.05 லட்சத்தில் வைரம்ஸ் நகர் புதிய பூங்கா, 11.50 லட்சத்தில் புலியருவி நவீன கழிப்பிடம், 14.43 லட்சத்தில் சிறுவர் பூங்கா, 18.35 லட்சத்தில் விஸ்வநாதராவ் பூங்கா பணிகள் நிறைவு பெற்றுள்ளன.
இதன் திறப்பு விழா நாளை (20ம் தேதி) மாலை 5 மணியளவில் டவுன் பஞ்., வளாகத்தில் நடக்கிறது. நிகழ்ச்சியில் தென்காசி எம்.எல்.ஏ., கருப்பசாமிபாண்டியன், மாவட்ட கலெக்டர் ஜெயராமன் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள், டவுன் பஞ்., தலைவர் ரேவதி, துணைத் தலைவர் ராமையா, செயல் அலுவலர் ராஜையா உட்பட பணியாளர்கள் கலந்து கொள்கின்றனர்.