தினமணி 21.10.2010
துப்புரவுப் பணியாளர் குடும்பத்துக்கு காப்பீட்டுத் தொகை அளிப்பு
பட்டுக்கோட்டை
, அக். 20: பட்டுக்கோட்டையில் துப்புரவுப் பணியாளர் குடும்பத்துக்கு ரூ. 1.5 லட்சம் காப்பீட்டுத் தொகை செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.பட்டுக்கோட்டை நகராட்சி துப்புரவுப் பணியாளர் செ
. சின்னப்பொன்னு பணி காலத்தில் இறந்தார். இதையொட்டி, அவருடைய மகன் செ. சுப்பிரமணியனிடம் குழுக் காப்பீட்டுத் திட்டத்தில் அளிக்கப்பட்ட ரூ. 1.5 லட்சத்துக்கான காசோலையை நகராட்சி ஆணையர் கு.வெ. பாலகிருஷ்ணன் வழங்கினார். நிகழ்ச்சியில் நகர்மன்ற முன்னாள் தலைவர் சீனி. இளங்கோ, உறுப்பினர் எஸ். ஸ்ரீதர், முன்னாள் உறுப்பினர் டி. கோவிந்தராஜ், அலுவலக மேலாளர் என். ராமமூர்த்தி, சுகாதார ஆய்வாளர் என். ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.