தினகரன் 22.10.2010
நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து சங்க கூட்டுக்குழு நிர்வாக கூட்டம்
புதுச்சேரி, அக். 22: புதுவை ஏஐடியுசி நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து சங்கங்களின் கூட்டுக்குழு நிர்வாக குழு கூட்டம் தலைமை அலுவலகத்தில் நடந்தது.
சங்க கூட்டு தலைவர் அபிஷேகம் த¬¬மை தாங்கினார். பொதுச்செயலாளர் மன்னாதன் நடந்த வேலைகள் குறித்தும், எதிர்கால வேலைகள் பற்றியும் விளக்கி பேசினார்.
பொருளாளர் ராஜேந்திரன், துணைத்தலைவர் அருணாச்சலம், செயலாளர் அஞ்சு கிருஷ்ணமூர்த்தி, அரியாங்குப்பம் பஞ்சாயத்து ஒர்க்கர்ஸ் யூனியன் செய லாளர் முருகையன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துகளில் 15 ஆண்டு காலமாக பணியாற்றி வரும் டிஎஸ் மற்றும் தினக்கூலி பகுதிநேர ஊழியர்களை உடனே நிரந்தரம் செய்ய வலியுறுத்தி கூட்டுக்குழு சார்பில் கடந்த 7ம் தேதி தர்ணா போராட்டம் கவர்னர் மாளிகை முன் நடந்தது. ஆனால் நிர்வாகம் இது நாள் வரையில் நிரந்தரம் செய்யப்படாததை கண்டித்து வரும் 25ம் தேதி முதல் டிஎஸ் மற்றும் தினக்கூலி பகுதி நேர ஊழியர்கள் அனைவரையும் நிரந்தரம் செய்யும் வரை இரவு, பகல் தொடர் உண்ணாவிரத போராட்டம் கவர்னர் மாளிகை முன் மேற்கொள்வது என ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டது.