தினமணி
25.10.2010வாக்காளர் சேர்க்கும் பணி விளக்கக் கூட்டம்
திருச்சி, அக். 24: திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட திருச்சி மேற்கு மற்றும் திருச்சி கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்கல் தொடர்பான விண்ணப்பங்களை அளித்து, நிரப்பிப் பெற்று, கள ஆய்வு மேற்கொள்ளும் பணிகள் தொடர்பான விளக்கக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்துக்கு
, மாநகராட்சி ஆணையரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான த.தி. பால்சாமி தலைமை வகித்தார். உதவி ஆணையர்கள் வி. நடராஜன் (கோ-அபிஷேகபுரம்), முத்துக்கிருஷ்ணன் (அரியமங்கலம்), பாஸ்கர் (ஸ்ரீரங்கம்), தேர்தல் தனித் துணை வட்டாட்சியர் கமலக்கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மனுதாரரால் நிரப்பப்பட வேண்டிய படிவங்கள் 6,7,8,8ஏ ஆகியவை குறித்து தேர்தல் பிரிவு அலுவலர்கள், வருவாய் உதவியாளர்கள் ஆகியோருக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.