Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கிருஷ்ணராயபுரம் அருகே உப்பிடமங்கலம் பேரூராட்சி கூட்டம்

Print PDF

தினகரன் 25.10.2010

கிருஷ்ணராயபுரம் அருகே உப்பிடமங்கலம் பேரூராட்சி கூட்டம்

கிருஷ்ணராயபுரம், அக். 25: கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள உப்பிடமங்கலம் பேரூராட்சி கூட்டம் கூட்ட அரங்கில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு தலைவர் ராஜலிங்கம் தலைமை வகித் தார். துணைத்தலைவர் மனோகரன், செயல் அலுவ லர் பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் லட்சுமணம்பட்டி காலனி தெருவில் இரண்டு மின் கம்பம் அமைத்து தெருவிளக்குகள் அமைப்பது, வெண்ணிலை கோடம்பட்டி களம் அருகில் தெரு விளக்கு அமைத்தல், உப்பிடமங்களம் பேரூராட்சி பகுதிகளில் அனைத்து வார்டுகளிலும் பழுதான தெரு விளக்கு, மின் கம்பங்களை மாற்றிக்கொடுக்குமாறு மின்வாரிய பொறியாளரை கேட்டுக்கொள்வது.

லிங்கத்தூரில் உள்ள 14, 15 வார்டுகளில் சேகரமாகும் குப்பைகளை கொட்டுவதற்கு அருகில் உள்ள தோப்புகளில் உள்ள முற்செடிகளை அகற்றுவது, உப்பிடமங்களம் வாரச்சந்தைகளில் குண்டு குழிகளில் மழைகாலங்களில் தண்ணீர் தேங்குவதால் குழி களை சமன் செய்தல், வணிக வளாக கடைக்கு முன் பழைய ரெங்கம்பாளையம் கல்வெட்டு முன் புது கஞ்சமனூர் அரிசன தெரு, புது ரெங்கம்பாளையம் செல்லும் பாதை ஆகிய இடங்களில் மண் அடித்து சரிசெய்வது. பேரூராட்சி பகுதிகளில் உள்ள வீடுகள், கடைகள், அலுவலங்கள் ஆகியவற்றி ற்கு கதவு எண்கள் பொறித்த தகடுகள் பொறுத்துவது உள் ளீட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் உறுப்பினர்கள் நல்லுசாமி, சரவணன், ராமசாமி, தமிழ்செல்வி, ராஜகுமாரி, பிச்சை முத்து, ருக்குமணி, வளர்மதி, அர்ச்சுணன், சின்னச்சாமி, போதும் பொண்ணு உட்பட பலர் கலந்து கொண்டனர்.