Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நகராட்சி நிர்வாக துறையில் 174 பேருக்கு நியமன ஆணை

Print PDF

தினகரன் 27.10.2010

நகராட்சி நிர்வாக துறையில் 174 பேருக்கு நியமன ஆணை

சென்னை, அக். 27: தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிக்கை:

நகராட்சி நிர்வாக துறையில் இதுவரை 4 கட்டங்களாக 628 வாரிசுதாரர்களுக்கு துணை முதல்வர் மு..ஸ்டாலின் கருணை அடிப்படையில் பணி நியமன பரிந்துரை ஆணைகளை வழங்கியுள்ளார்.

இதன் தொடர்ச்சியாக நகராட்சி பணியிலிருக்கும்போது மரணமடைந்த 174 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு இளநிலை உதவியாளர், வருவாய் உதவியாளர், பணி ஆய்வாளர், ஓட்டுனர், பதிவறை எழுத்தர், அலுவலக உதவியாளர் மற்றும் காவலர் போன்ற பணியிடங்களுக்கு பணி நியமன பரிந்துரை ஆணைகளை ஸ்டாலின் நேற்று வழங்கினார்.

நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலர் அசோக்வர்தன் ஷெட்டி, இயக்குனர் ப.செந்தில்குமார் உட்பட பலர் உடனிருந்தனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மு..ஸ்டாலின் வழங்கினார்

துணை முதல்வர் மு.. ஸ்டாலின் நேற்று, தமிழ்நாடு நகராட்சி பணியிலிருக்கும்போது இயற்கை எய்திய 174 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு இளநிலை உதவியாளர், வருவாய் உதவியாளர், பணி ஆய்வர், ஓட்டுநர், பதிவறை எழுத்தர், அலுவலக உதவியாளர், மற்றும் காவலர் போன்ற பணியிடங்களுக்கு கருணை அடிப்ப¬டியில் பணிநியமனப் பரிந்துரை ஆணைகளை வழங்கினார்.