தினமணி 23.08.2009
பன்றிகளுக்கு தடை
சிவகாசி, ஆக. 22: சிவகாசி நகராட்சி எல்லைக்குள் பன்றிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக, நகராட்சி ஆணையாளர் எஸ். விஜயராகவன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சிவகாசி நகராட்சிப் பகுதியில் பன்றிகள் நடமாட்டம் கட்டுக்குள் உள்ளது. நகராட்சி எல்லைக்கு அருகே வளர்க்கப்படும் பன்றிகள், நகர எல்லைக்குள் வந்தால் அவை பிடிக்கப்படும். அந்த பன்றிகள் உரிமையாளர்களிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட மாட்டாது.