Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சுகாதார பணி தீவிரம் நகராட்சி பகுதியில் பன்றிகள் வேட்டை

Print PDF

தினகரன்                  29.10.2010

சுகாதார பணி தீவிரம் நகராட்சி பகுதியில் பன்றிகள் வேட்டை

ஜெயங்கொண்டம், அக். 29: ஜெயங்கொண்டம் நகராட்சியில் சுற்றி திரியும் பன்றிகளை நகராட்சியினர் அப்புறப்படுத்தினர்.

ஜெயங்கொண்டம் நகராட்சிக்குட்பட்ட சின்னவளையம், சீனுவாசநகர், ஸ்டேட் பேங்க் காலனி, வேலாயுதநகர், கரடிகுளம் ஆகிய பகுதிகளில் உள்ள தெருக்களில் அதிக பன்றிகள் சுற்றி திரிந்து சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தின. இது குறித்து பன்றி வளர்ப்போரை பல முறை எச்சரித்தும் தொடர்ந்த பனிறிகள் உலா வந்தன.

இதையடுத்து ஜெயங்கொண்டம் நகராட்சி செயல் அலுவலர் மோகன் உத்தரவின் பேரில் நேற்று அதிரடி நடவடிக்கையில் இறங்கிய நகராட்சி ஊழியர்கள் மூலம் ஒரே நாளில் 52 பன்றிகளை காவல் துறை உதவியுடன் பிடித்தனர். பின்னர் லாரியில் அவற்றை உயிருடன் கொண்டு சென்று காட்டுப்பகுதியில் விடப்பட்டன.