Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கரூர் நகர்மன்றக் கூட்டம்

Print PDF

தினமணி                    29.10.2010

கரூர் நகர்மன்றக் கூட்டம்

கரூர், அக். 28: கரூர் நகர்மன்றக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு நகர்மன்றத் தலைவர் பெ. சிவகாமசுந்தரி தலைமை வகித்தார். துணைத் தலைவர் பி. கனகராஜ் முன்னிலை வகித்தார்.

இந்தக் கூட்டத்தில் பொன்விழா ஆண்டு நகர்ப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் ரூ. 3,34,195 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது குறித்தும், அந்த நிதியில் இரட்டைவாய்க்காலுக்கு தடுப்புச் சுவர் அமைப்பது குறித்தும் தீர்மானிக்கப்பட்டது.

மேலும், ரூ. 6.05 லட்சத்தில் நகராட்சியில் பணியாற்றும் ஓட்டுநர்கள், துப்புரவுப் பணியாளர்கள், அலுவலக உதவியாளர்கள், தாய் சேய் நல உதவியாளர்களுக்கு சீருடை, காலணி வழங்குவது என்பது உள்ளிட்ட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கவுன்சிலர்கள் இரா. பிரபு, ஆண்டாள் பாலகுரு, . சுப்பன் உள்ளிட்டோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்