Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நகராட்சி சத்துணவு பணிக்கு 224 பேர் விண்ணப்பம்

Print PDF

தினமலர்                 01.11.2010

நகராட்சி சத்துணவு பணிக்கு 224 பேர் விண்ணப்பம்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி நகராட்சியில் சத்துணவு அமைப்பாளர் இரண்டு பணியிடத்திற்கு 224 பேர் விண்ணப்பித்துள்ளனர். பொள்ளாச்சி நகராட்சி பள்ளிகளில் காலியாகவுள்ள சத்துணவு அமைப்பாளர் மற்றும் உதவியாளர் பணியிடங்கள் இனசுழற்சி ஒதுக்கீடு முறையில் நிரப்பப்படுகின்றன. கடந்த செப்., 22ம் தேதி முதல் அக்., 5ம் தேதி வரையிலும் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. சத்துணவு அமைப்பாளர் பணியிடத்திற்கு விண்ணப்பித்தவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு பணி பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில் நடந்தது. சத்துணைவு அமைப்பாளர் இரண்டு பணியிடத்திற்கு விண்ணப்பித்த 224 பேரின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன. சத்துணவு உதவியாளர் 12 பணியிடங்களுக்கு விண்ணப்பித்த 79 பேர் விண்ணப்பித்திருந்தனர்.

அவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன. சான்றிதழ்களை சரிபார்த்த நகராட்சி கமிஷனர் பூங்கொடி அருமைக்கண், விண் ணப்பங்களை மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். பொள்ளாச்சி வடக்கு மற்றும் தெற்கு ஒன்றியத்தில், சத்துணவு அமைப்பாளர் மற்றும் உதவியாளர்களுக் கான நேர்காணல் நடந்தது. பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்தில், இரண்டு அமைப்பாளர் பணியிடத்திற்கும், ஒன்பது உதவியாளர் பணியிடத்திற்கும் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டது.

 இதில், இனசுழற்சி முறையில் பயனாளிகள் விண்ணப்பித்திருந்தனர். இதற்கான நேர்காணல் நடந்தது. அமைப்பாளர் பணியிடத்திற்கு 65 பேரும், உதவியாளர் பணியிடத்திற்கு 60 பேரும் விண்ணப்பித்தனர். வட்டார வளர்ச்சி அலுவலர் வளநாட்டுத்துரை, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (சத்துணவு) தனலட்சுமி ஆகியோர் விண்ணப்பித்தவர்களிடம், சான்றிதழ்களை சரிபார்த்தனர்.பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தில், 11 அமைப்பாளர் பணியிடத்திற்கு 148 பேரும், 10 உதவியாளர் பணியிடத்திற்கு 58 பேரும் விண்ணப்பித்திருந்தனர். வட்டார வளர்ச்சி அலுவலர் கார்த்திகைரத்தினம் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (சத்துணவு) மாரிமுத்து ஆகியோர் நேர்காணலை நடத்தினர். இதில், தேர்வான பயனாளிகள் குறித்த அறிக்கை மாவட்ட நிர்வாகத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது. வால்பாறை: வால்பாறையில் காலியாக உள்ள சத்துணவுப்பணியிடங்களுக்கு நேர்முகத்தேர்வு நடந்தது. வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பத்து சத்துணவு அமைப்பாளர் பணியிடமும், பத்து சமையலர் பணியிடமும் காலியாக உள்ளன. இந்தப்பணிகளுக்கான நேர்முகத்தேர்வு வால்பாறை நகராட்சி அலுவலகத்தில் நடந்தது. நகராட்சி செயல்அலுவலர் ராஜ்குமார் தலைமையில் நடந்த நேர்முகத்தேர்வில் கலந்து கொண்டவர்களிடம் பொறியாளர் சுப்பிரமணி, தலைமை எழுத்தர் ராமதாசு ஆகியோர் சான்றிதழ்களை சரிபார்த்த பின்னர் நேர்முகத் தேர்வு நடத்தினர். இந்த நேர்முகத்தேர்வில் சத்துணவு அமைப்பாளர் பணியிடத்திற்கு 83 பேரும், சத்துணவு சமையலர் பணியிடத்திற்கு 139 பேரும் விண்ணப்பித்திருந்தனர்.