Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சோழிங்கநல்லூரில் உள்ளாட்சி தினவிழா மகளிர் குழு பேரணி

Print PDF

தினகரன்                 02.11.2010

சோழிங்கநல்லூரில் உள்ளாட்சி தினவிழா மகளிர் குழு பேரணி

துரைப்பாக்கம், நவ. 2: சோழிங்கநல்லூர் பேரூராட்சி சார்பில் உள்ளாட்சி தினவிழா நேற்று கொண்டாடப்பட்டது. தலைவர் அரவிந்த் ரமேஷ் தலைமை வகித்தார். பேரூராட்சியின் 4 ஆண்டு பணிகளை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் டிஜிட்டல் போர்டு வைக்கப்பட்டது.

பள்ளி மாணவ, மாணவிகள், மகளிர் சுய உதவி குழுவினர் பங்கேற்ற பேரணியும் நடந்தது. இதை அரவிந்த் ரமேஷ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மழைநீர் சேகரிப்பு, சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு வாசங்கள் அடங்கிய அட்டைகளை பேரணியில் சென்றவர்கள் பிடித்துச் சென்றனர். கிராம நெடுஞ்சாலை வழியாக பேரணி சென்று திரும்பியது. செயல் அலுவலர் சம்பத், கவுன்சிலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.