Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஒருங்கிணைந்த வாக்காளர் பட்டியலில் ஒரே நபரின் பெயர் 5 இடங்களில் இருப்பதாக நகராட்சி கூட்டத்தில் புகார்

Print PDF

தினகரன்                02.11.2010

ஒருங்கிணைந்த வாக்காளர் பட்டியலில் ஒரே நபரின் பெயர் 5 இடங்களில் இருப்பதாக நகராட்சி கூட்டத்தில் புகார்

விருதுநகர், நவ. 2: ஒருங்கிணைந்த வாக்காளர் பட்டியலில் ஒரே நபரின் பெயர் 5 இடங்களில் இருப்பதாக நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் சரமாரியாக குற்றச்சாட்டுகளை தெரிவித்தனர்.

விருதுநகர் நகராட்சியின் சாதாரண கூட்டம் தலைவர் கார்த்திகா, துணைத்தலைவர் காசிராஜன் தலைமையில் ஆணையர் ஜான்சன் முன்னிலையில் நடைபெற்றது. இதில் கவுன்சிலர்கள் சுபேதா, ஜெயக்குமார், மாரியப்பன் ஆகியோர் பேசுகையில்:

ரயில்வே ஸ்டேஷன் அருகில் உள்ள தனியார் தொழிற்சாலை நகராட்சியின் அனுமதியின்றி இயங்கி வருகிறது. பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் தொழிற் சாலை லைசென்ஸ் இல்லாமல் இயங்க அனுமதிக்கக்கூடாது.

இந்த தொழிற்சாலையிலிருந்து வெளிவரும் புகையால் ரயில் நிலையம் வரை கடும் பாதிப்பு ஏற்படுகிறது. நகராட்சி அனுமதியின்றி இயங்கி வரும் தொழிற்சாலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்Ó என்றனர்.

கவுன்சிலர் கார்த்திகேயன் பேசுகையில், "ஒருங்கிணைந்த வாக்காளர் பட்டியலில் குளறுபடி உள்ளது. 33 வது வார்டை சேர்ந்த ஞானகுமார் என்பவரது படம் ஒரே பக்கத்தில் தொடர்ச்சியாக 5 இடங்களில் இடம்பெற்றுள்ளது. இதேபோல் புதிதாக அடையாள அட்டைக்காக படம் எடுத்த ஏராளமானோருக்கு இதுவரை அடையாள அட்டை வராதநிலை தொடர்கிறது. இதனால் தேர்தலில் ஓட்டு போடு முடியாதநிலை உருவாகிவிடும்Ó என்றார்.

ஆணையர் ஜான்சன் பேசுகையில், "தேர்தல் கமிஷன்தான் இதனை சரிசெய்ய வேண்டும்Ó என்றார்.

கவுன்சிலர் ஆறுமுகம்: தேர்தல் கமிஷன் கூட்டங்களுக்கு ஆணையர்தான் செல்கின்றனர். அப்போது இதை தெரிவித்து சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண் டும்Ó என்றார். இவ்வாறு கூட்டத்தில் விவாதம் நடந்தது.