தினகரன் 02.11.2010
குழித்துறை நகராட்சியில் உள்ளாட்சி தினவிழா
மார்த்தாண்டம், நவ. 2: உள்ளாட்சி தின விழாவையொட்டி குழித்துறை நகராட்சியில் நகர்மன்ற தலைவர் பொன். ஆசைத்தம்பி தலைமையில் உள்ளாட்சி தின விழா கொண்டாடப்பட்டது. நகராட்சி இன்ஜினியர் ரமேஷ் முன்னிலை வகித்தார்.
விழாவில் டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு திட்டத்தில் 20 கர்ப்பிணி பெண்களுக்கு தலா ரூ6 ஆயிரம் வீதம் உதவித்தொகை வழங்கப்பட்டது. மேலும் நகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு சீருடை வழங்கப்பட்டது. விழாவில் கவுன்சிலர்கள் விஜூ, ரத்தினமணி, பிரவின்ராஜா மற்றும் நகராட்சி ஊழியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இது போன்று நல்லூர் பேரூராட்சியில் தலைவர் விஜயகுமார் தலைமையிலும், உண்ணாமலைக்கடை பேரூராட்சியில் தலைவர் ஜெயசீலன் தலைமையிலும் உள்ளாட்சிதின விழா கொண்டாடப்பட்டது.