தினகரன் 02.11.2010
நெல்லை மாநகராட்சியில் உள்ளாட்சி தின விழா
நெல்லை, நவ.2: நெல்லை மாநகராட்சியில் நடந்த உள்ளாட்சி தினவிழாவில் துப்புரவு பணியாளர்களுக்கு இலவச சீருடை வழங்கப்பட்டது.
விழாவிற்கு மேயர் சுப்பிரமணியன் தலைமை வகித் தார். எம்.எல்.ஏ. மாலை ராஜா, கமிஷனர் சுப்பையன், துணைமேயர் முத்துராமலிங்கம், மண்டல தலைவர் கள் விஸ்வநாத பாண்டியன், சுப்பிரமணியன், உதவி கமிஷனர் பாஸ்கர் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
விழாவில் பாதாள சாக்க டை திட்டத்தை பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஸ்டிக்கர் வெளியிடப்பட்டது. டாக்டர் முத்து லட்சுமி ரெட்டி மகப்பேறு திட்டத்தின் கீழ் 712 பேருக்கு ரூ.27 லட்சத்து 48 ஆயிரம் நிதி உதவி வழங்கும் நிகழ்ச் சியை மேயர் துவக்கி வைத் தார். துப்புரவு பணியாளர்களுக்கு இலவச சீருடையும், குடியிருப்பு மேம்பாட்டு திட்டத்தில் வீடு கட்டுவோருக்கு விண்ணப்பங்களும் வழங்கப்பட்டன.
நெல்லை மாநகராட்சியில் நடந்த உள்ளாட்சி தின விழாவில் துப்புரவு தொழிலாளர்களுக்கு மேயர் சுப்பிரமணியன் சீருடை வழங்கினார். அருகில் மாலைராஜா எம்எல்ஏ, துணை மேயர் முத்துராமலிங்கம்.