Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பெரம்பலூர் நகராட்சியில் உள்ளாட்சி தினவிழா துப்புரவு பணியாளருக்கு இலவச சீருடை

Print PDF

தினகரன்                     02.11.2010

பெரம்பலூர் நகராட்சியில் உள்ளாட்சி தினவிழா துப்புரவு பணியாளருக்கு இலவச சீருடை

பெரம்பலூர், நவ. 2: பெரம்பலூர் நகராட்சியில் நடந்த உள்ளாட்சி தினவிழாவில் துப்புரவு பணியாளர்களுக்கு சீருடை வழங்கப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 1ம் தேதி உள்ளாட்சி தினவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. நடப்பா ண்டு பெரம்பலூர் மாவட்டத்தில் 121 ஊராட்சிகள், பெரம்பலூர், ஆலத்தூர், வேப்பூர், வேப்பந்தட்டை ஆகிய 4 ஒன்றியங்கள், குரு ம்பலூர், அரும்பாவூர், பூலா ம்பாடி, லப்பைகுடிகாடு ஆகிய 4 பேரூராட்சி, ஒரு மாவட்ட ஊராட்சி உள்ளி ட்ட 130 உள்ளாட்சி அமைப்புகளில் உள்ளாட்சி தின விழா கொண்டாடப்பட்டது.

பெரம்பலூர் நகராட்சி யில் நடந்த நிகழ்ச்சிக்கு நக ராட்சி தலைவர் இளைய ராஜா தலைமை வகித்தார். எம்எல்ஏ ராஜ்குமார் முன் னிலை வகித்தார். நகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு சீருடைகளை கலெக்டர் (பொ) பழனிச்சாமி வழங்கினார். முன்னதாக கலெக் டர் பழனிச்சாமி, எம்எல்ஏ ராஜ்குமார், நகராட்சி தலைவர் இளையராஜா, துணைத்தலைவர் முகுந்தன், ஆணையர் சுரேந்திர ஷா ஆகியோர் வெண் புறாக் களை பறக்க விட்டனர்.

நகராட்சி அலுவலக வளாகத்தில் பிறப்பு, இறப்பு சான்றிதழ் பதிவு, குடிநீர் இணைப்பு, பாதாள சாக் கடை திட்ட இணைப்பு, வீட்டுமனை வரிவிதிப்பு ஆகியவற்றிற்காக விண்ணப்பித்து உடனுக்குடன் பயன்பெற வசதியாக அமை க்கப்பட்டுள்ள தகவல் மையம், குடிநீர், தெருவிள க்கு, சுகாதாரப்பணிகள் தொடர்பான புகார் பதிவு செய்யும் மையத்தை எம்எல்ஏ ராஜ்குமார் திறந்து வைத்தார். பெரம்பலூர் கோட்டாட்சியர் பாலுசாமி, டிஎஸ்பி காஜாமொய்தீன், கிறிஸ்டியன் கல்வி நிறுவனங்களின் தாளாளர் கிறிஸ்டோபர் வாழ்த்தினர்.

நகராட்சி துணைத்தலைவர் முகுந்தன், ஆணை யர் சுரேந்திரஷா, கவுன்சிலர்கள் பாரி, அன்புதுரை, கனகராஜ், ரஹமத்துல்லா, சிவக்குமார், மாரிக்கண் ணன், ஜெயகுமார், ரமேஷ் பாண்டியன், சுசீலா, ஈஸ்வரி, புவனேஷ்வரி, கண் ணகி, தாண்டாயி மற்றும் நகராட்சி பொறியாளர், துப்புரவு ஆய்வாளர், மேற்பார்வையாளர், அலுவலர் கள் கலந்து கொண்டனர்.

இதையடுத்து சுகாதாரத்தை வலியுறுத்தி நர்சிங் கல்லூரிகளை சேர்ந்த மாணவிகள் கலந்து கொண்ட சுகாதார விழிப்புணர்வு பேரணியை கலெக்டர்(பொ) பழனிச்சாமி துவக்கி வைத் தார்.

பேரணியில் தனலட்சுமி சீனிவாசன் நர்சிங் கல்லூரி, ரோவர் நர்சிங் கல்லூரி, கிறிஸ்டியன் நர்சிங் கல்லூரிகளை சேர்ந்த மாணவிகள் கலந்து கொண்டனர். பழைய பஸ்ஸ்டாண்டு, காமராஜர் வளைவு, சங்குப்பேட்டை, வெங்கடேசபுரம், பாலக்கரை வழியாக புதுபஸ்ஸ்டாண்டு பகுதி வரை பேரணி நடந்தது.