தினகரன் 02.11.2010
ராணிப்பேட்டை நகராட்சியில் ரூ8 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் காந்தி எம்.எல்.ஏ. வழங்கினார்
ராணிப்பேட்டை,நவ.2: ராணிப்பேட்டை நகராட்சியில் நடந்த உள்ளாட்சி தின விழாவில் ரூ8 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை, எம்.எல்.ஏ. காந்தி வழங்கினார்.
ராணிப்பேட்டை நகராட்சி வளாகத்தில் நேற்று உள்ளாட்சி தின விழா நகராட்சி தலைவா¢ கிருஷ்ணமூ£¢த்தி தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் எஸ்.எம்.சுகுமார் முன்னிலை வகித்தார். நகராட்சி பொறியாளா¢ முருகன் வரவேற்றார்.
விழாவில் சிறப்பு விருந்தினராக எம்.எல்.ஏ. காந்தி கலந்துகொண்டு 104 பெண்களுக்கு மகப்பேறு நிதி ரூ6 லட்சம், சொர்ணஜெயந்தியோஜனா திட்டத்தின் கீழ் கணினி பயிற்சி பயிலும் இளைஞா¢கள், இளம்பெண்கள் மற்றும் தனியார்கணினி நிறுவனத்தார் ஆகியோருக்கு ரூ2 லட்சத்து 32 ஆயிரம் நிதி உதவியை வழங்கி பேசினார்.
மற்றும் மாவட்ட கவுன்சிலர் நந்தகுமார், ஆற்காடு நகராட்சி தலைவா¢ ஈஸ்வரப்பன், கவுன்சிலா¢கள் தாமோதிரன், அப்துல்லா, முத்துகிருஷ்ணன், பரமேஸ்வரி, நகராட்சி மருத்துவா¢ வானதி, உள்பட பலர் பேசினர். முன்னதாக உள்ளாட்சி தினம் முன்னிட்டு நடந்த ஊர்வலத்தை நகராட்சித் தலைவா¢ கிருஷ்ணமூ£¢த்தி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
என்.சி.சி. அலுவலார் அன்பழகன் முன்னிலையில் மாணவ, மாணவிகள் பங்கேற்ற ஊ£¢வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் நகராட்சி வளாகத்தில் முடிவடைந்தது.
முடிவில் நகராட்சி மேலாளார் விஜயலட்சுமி நன்றி கூறினார்.
மேலும் ராணிப்பேட்டை கோட்டாட்சியா¢ அலுவலகத்தில் நேற்று நலத்திட்ட உதவி சிறப்பு முகாம், கோட்டாட்சித்தலைவார் முகுந்தன் தலைமையில் நடைபெற்றது.
வாலாஜா தாசில்தார்சிங்காரம், நகராட்சித் துணைத்தலைவர் எஸ்.எம்.சுகுமார், வட்ட வழங்கல் அலுவலா¢ மோகன், வருவாய் ஆய்வாளார் ராஜசேகரன், சமூக பாதுகாப்பு திட்ட தனி அலுவலர் விமலா ஆகியோர் முன்னிலை வகித்தனார்.
விழாவில் சிறப்பு விருந்தினராக எம்.எல்.ஏ. காந்தி கலந்துகொண்டு கொண்டக்குப்பம் சிலோன் காலனி யை சேர்ந்த 36 பேருக்கு வீட்டுமனை பட்டாக்கள் மற்றும் 27 பேருக்கு புதிய குடும்ப அட்டைகள், விவசாய தொழிலாளர் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 8 பேருக்கு உதவி தொயை£க ரூ36 ஆயிரம், ஈமச்சடங்கு நிவாரண நிதி 5 பேருக்கு ரூ50
ஆயிரம், நலிந்தோர் குடும்ப நல உதவி திட்டத்தின் கீழ் 7 பேருக்கு ரூ1 லட்சத்து 56 ஆயிரம், உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.