தினகரன் 02.11.2010
செங்கம் பகுதியில் உள்ளாட்சிகள் தின விழா
செங்கம், நவ.2: செங்கம் பகுதியில் நேற்று உள்ளாட்சிகள் தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. செங்கம் அடுத்த மேல்பள்ளிப்பட்டு ஊராட்சியில் நேற்று உள்ளாட்சி தின விழா நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் வேடியப்பன் தலைமை தாங்கினார்.
ஆணையாளர் சங்கரன் முன்னிலை வகித்தார். ஆணையாளர் பரிதிமால் வரவேற்றறு பேசினார்.
சிறப்பு விருந்தினராக ஒன்றிய குழு தலைவர் குமார் கலந்து கொண்டு பேசினார். முடிவில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முருகன் நன்றி கூறினார்.
செங்கம் பேரூராட்சியில் உள்ளாட்சி தினவிழாவை யொட்டி புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஊர்வலமாக வந்து ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நிறை வடைந்தது.
பேரூராட்சி தலைவர் பத்மா தலைமை தாங்கினார். துணைத்தலைவர் அப்துல்சத்தார் முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் மதிவாணன் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி தலைவர் பாண்டுரங்கன், செயலாளர் ராமமூர்த்தி மற்றும் கவுன்சிலர்கள் பலரும் கலந்து கொண்டனர். முடிவில் முன்னாள் பேரூராட்சி தலைவர் சாதிக்பாஷா நன்றி கூறினார்.