Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

திண்டுக்கல்லில் உள்ளாட்சி தின விழா

Print PDF

தினமலர்            02.11.2010

திண்டுக்கல்லில் உள்ளாட்சி தின விழா

நிலக்கோட்டை:வத்தலக்குண்டு,நிலக்கோட்டையில் உள்ளாட்சி தின விழா நடந்தது. வத்தலக்கண்டு பேரூராட்சியில் தலைவர் ராஜாத்தி மெர்சி தலைமை வகித்தார். துணை தலைவர் ரவி முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் பாலமுருகன் வரவேற்றார். கவுன்சிலர் சின்னதுரை உட்பட பணியாளர்கள் பங்கேற்றனர்.போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.சேவுகம்பட்டி பேரூராட்சியில் தலைவர் நாகராணிபெருமாள் தலைமை வகித்தார். துணை தலைவர் வனிதாதங்கராஜன் முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் கமர்தீன் வரவேற்றார். நாடகம், பேச்சு, கட்டுரை போட்டிகள் நடந்தன. பேரூராட்சி கூட்டம் நடப்பதை போல் மாணவர்கள் நாடகம் நடத்தினர். விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. பரிசுகள் வழங்கப்பட்டது.நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளாட்சி தின விழா கொண்டாடப்பட்டது.

அனைத்து ஊராட்சிகளிலும் அலுவலகங்களில் பேச்சு, போட்டி, நாடகம் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.ராமராஜபுரத்தில் தலைவர் மாயாண்டி தலைமை வகித்தார். துணை தலைவர் ராசேந்திரன் முன்னிலை வகித்தார். உதவியாளர் முருகானந்தம் நன்றி கூறினார்.மட்டப்பாறையில் தலைவர் செந்தில்வடிவு முனியசாமி தலைமை வகித்தார். துணை தலைவர் ஜெயமணிபெரியகருப்பன் முன்னிலை வகித்தார். உதவியாளர் ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார்.குல்லலக்குண்டுவில் தலைவர் யசோதைதெய்வராஜ் தலைமை வகித்தார். துணை தலைவர் நாகராஜ் முன்னிலை வகித்தார். உதவியாளர் செல்வம் நன்றி கூறினார்.பழநி: பழநி நகராட்சி சார்பில் உள்ளாட்சிகள் தினவிழா, தலைவர் ராஜமாணிக்கம் தலைமையில் நடந்தது.

 கமிஷனர் மூர்த்தி முன்னிலை வகித்தார். துணைத்தலைவர் ஹக்கீம் வரவேற்றார். நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு, பேச்சு, கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. ஒட்டுமொத்த சுகாதாரம், மரம் நடுவிழா, விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. கவுன்சிலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.வேடசந்தூர்: வேடசந்தூர் ஒன்றியத்தில் ஊராட்சி, பேரூராட்சிகளில் உள்ளாட்சி தின விழா நடந்தது.வேடசந்தூர் பேரூராட்சியில் தலைவர் பஷீர் அகமது தலைமையில், துø ணத் தலைவர் பழனிச்சாமி முன்னிலையில் நடந்தது. செயல்அலுவலர் என். செல்வா வரவேற்றார். ஒன்றியத்தில் நடந்த விழாவிற்கு தலைவர் நடராசன் தலைமை தாங்கினார்.ஆணையாளர்கள் சுப்பிரமணியன், சாம்.சாந்தகுமார் முன்னிலை வகித்தனர்.துணை ஆணையாளர் மலரவன் வரவேற்றார்.