தினகரன் 02.11.2010
கயத்தாரில் உள்ளாட்சி தினவிழா
கயத்தார், நவ. 2: கயத்தார் பேரூராட்சியில் உள்ளாட்சி தின விழா பேரணி மற்றும் பள்ளி மாணவ மாணவிகளுக்கிடையிலான பேச்சு போட்டி நடந்தது. உள்ளாட்சி தின விழா பேரணியை பேரூராட்சித்தலைவர் இஸ்மாயில் முகைதீன் தலைமையேற்று துவக்கி வைத்தார். வீரபாண்டிய கட்டபொம்மன் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியை சௌந்திரநாயகி, பேரூராட்சி நிர்வாக அலுவலர் மூக்கன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பேரணி கயத்தார் நகரின் முக்கியவீதிகளின் வழியாக பஞ்சாயத்து அலுவலகத்தை வந்தடைந்தது. தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப்போட்டி பேரூராட்சி கூட்ட அரங்கில் நடந்தது. பேரணியில் அரசுமேல்நிலைப்பள்ளி என்.எஸ்.எஸ், என்.சி.சி மாணவர்கள், திட்ட அலுவலர்கள், துணைத்தலைவர் காந்தையா மற்றும் பஞ். கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
கயத்தார் பேரூராட்சியில் உள்ளாட்சி தினவிழா நடந்தது.