Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஸ்ரீவிலி.யில் உள்ளாட்சி தின விழா

Print PDF

தினமணி                02.11.2010

ஸ்ரீவிலி.யில் உள்ளாட்சி தின விழா

ஸ்ரீவில்லிபுத்தூர், நவ. 1: ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி சார்பில் திங்கள்கிழமை உள்ளாட்சி தின விழா கொண்டாடப்பட்டது.

விழாவுக்கு நகராட்சி ஆணையாளர் முத்துக்கண்ணு தலைமை வகித்து, அரசு நகராட்சி நிர்வாகம் சார்பில் செயல்படுத்திவரும் நலத் திட்டங்கள் குறித்து விளக்கினார்.

நகராட்சித் துணைத் தலைவர் அழகர்சாமி, 300 கர்ப்பிணிப் பெண்களுக்கு அரசு நிதியுதவியை வழங்கிப் பேசினார்.

விழாவில், நகர்மன்ற உறுப்பினர்கள் செல்வமணி, வழக்கறிஞர் சந்தானம், சுப்பிரமணியன், இருளப்பன், பிரேமா, காளீஸ்வரி, ரெங்கநாயகி, தெரசா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதனையொட்டி, பள்ளி மாணவ, மாணவியருக்கு நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கப்பட்டன.

முன்னதாக, நகர்மன்ற திரு.வி.. உயர்நிலைப் பள்ளி முன்பு இருந்து சுகாதார விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.

பேரணியை துணைத் தலைவர் அழகர்சாமி கொடியசைத்துத் தொடக்கி வைத்தார். பேரணி நகரின் முக்கிய வீதிகளின் வழியே வந்து நகராட்சி அலுவலகத்தை அடைந்தது. பேரணியில் பங்கேற்ற மாணவ, மாணவியர் சுகாதார விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி வந்தனர்.