தினமணி 02.11.2010
ஒட்டன்சத்திரத்தில் உள்ளாட்சிகள் தின விழா
ஒட்டன்சத்திரம், நவ. 1: ஒட்டன்சத்திரம் நகராட்சியில் உள்ளாட்சிகள் தின விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
ஆணையாளர் (பொறுப்பு) எம்.பி. மூர்த்தி தலைமை வகித்தார். நகராட்சி தலைவர் உமாமகேஸ்வரி கண்ணன், துணைத் தலைவர் வனிதா ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
உள்ளாட்சி தின விழாவை முன்னிட்டு பள்ளி குழந்தைகளுக்கு கட்டுரைப் போட்டி,விளையாட்டுப் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டது. அனைத்து வார்டுகளிலும் தீவிர துப்புரவுப் பணி முகாம் நடைபெற்றது. சிறப்பாகப் பணியாற்றிய துப்புரவுப் பணியாளர்கள் மற்றும் பெண்கள் சுயஉதவிக் குழுவினருக்கு பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டது. பின்னர் துப்புரவுப் பணியாளருக்கு 2010-11-ம் ஆண்டிற்கான சீருடைகள், காலணிகள் வழங்கப்பட்டன.