Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

களியக்காவிளை பேரூராட்சியில் உள்ளாட்சி தின விழா

Print PDF

தினமணி               02.11.2010

களியக்காவிளை பேரூராட்சியில் உள்ளாட்சி தின விழா

களியக்காவிளை, நவ. 1: களியக்காவிளை பேரூராட்சியில் உள்ளாட்சி தின விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

பேரூராட்சி மன்ற அலுவலகத்தில் மன்றத் தலைவர் எஸ். இந்திரா தலைமையில் நடைபெற்ற விழாவுக்கு செயல்

அலுவலர் (பொறுப்பு) இரா. சுருளிவேல் முன்னிலை வகித்தார்.

துணைத் தலைவர் சலாவுதீன், பேரூராட்சி உறுப்பினர்கள் என். விஜயானந்தராம், என். விஜயேந்திரன், எம்.எஸ்.. கமால், . ராஜு, பத்மினி, ராதா, வின்சென்ட் ஆகியோருடன் பேரூராட்சி ஊழியர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

களியக்காவிளை பேரூராட்சியை குப்பை இல்லாத பேரூராட்சியாக மாற்ற உறுதிமொழி எடுக்கப்பட்டது.

திருத்துவபுரம் முதல் களியக்காவிளை வரையிலான தேசிய நெடுஞ்சாலையோரங்களில் உள்ள கழிவு நீரோடைகளையும், கிராமப்புற கழிவு நீரோடைகளையும் ஜே.சி.பி. இயந்திரம் மூலம் தூர்வாரி பராமரிக்கவும் அதற்கு பேரூராட்சி பொது நிதியிலிருந்து செலவு செய்யவும் பொதுமக்கள் முன்னிலையில் முடிவு செய்யப்பட்டது.