Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நெல்லை மாநகராட்சியில் உள்ளாட்சி தின விழா

Print PDF

தினமணி                        02.11.2010

நெல்லை மாநகராட்சியில் உள்ளாட்சி தின விழா

திருநெல்வேலி, நவ. 1: திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை உள்ளாட்சி தின விழா கொண்டாடப்பட்டது.

மேயர் அ.லெ. சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவிற்கு, துணை மேயர் கா. முத்துராமலிங்கம், ஆணையர் சுப்பையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக என். மாலைராஜா எம்.எல்.. கலந்து கொண்டார்.

விழாவில், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித் தொகை திட்டத்தின் கீழ், மாநகராட்சிப் பகுதியைச் சேர்ந்த 712 பெண்களுக்கு ரூ. 27.48 லட்சம் நிதியுதவி வழங்கும் பணியை மேயர் தொடக்கிவைத்தார்.

நிகழ் நிதியாண்டில் 3-வது கட்டமாக இந்த நிதியுதவி வழங்கப்படுகிறது.

விழாவில், மாநகராட்சியின் துப்புரவுப் பணியாளர்களுக்கு சீருடைகளையும் மேயர் வழங்கினார்.

மண்டலத் தலைவர்கள் விஸ்வநாதன் (திருநெல்வேலி), பூ. சுப்பிரமணியன் (தச்சநல்லூர்), மாமன்ற உறுப்பினர்கள் சுரேஷ், பிராங்ளின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.