Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சுரண்டையில் உள்ளாட்சி தின விழா

Print PDF

தினமணி               02.11.2010

சுரண்டையில் உள்ளாட்சி தின விழா

சுரண்டை, நவ. 1: சுரண்டை பேருராட்சியில் உள்ளாட்சி தின விழா திங்கள்கிழமை நடைபெற்றது. பேரூராட்சி மன்ற கூட்ட அரங்கில் நடைபெற்ற இந்த விழாவுக்கு பேரூராட்சித் தலைவர் ப.கோமதி பழனி தலைமை வகித்தார்.

மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் எஸ்.பழனிநாடார், பேரூராட்சி துணைத் தலைவர் ப.ராமர், செயல் அலுவலர் ம.சாமுவேல் துரைராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் பேரூராட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டப் பணிகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் பூவதி, வேல்சாமி, அமராவதி, மகேஷ், சீனிவாசன், பட்டுராஜ், அய்யாத்துரை, அருணாசலக்கனி, ஜெயபால், ராஜேந்திரன், கல்பனா, கார்த்திகேயினி மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் கலந்துகொண்டனர்.