Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

திருவிதாங்கோடு பேரூராட்சியில் இலவச கால்நடை மருத்துவ முகாம்

Print PDF

தினமணி                  02.11.2010

திருவிதாங்கோடு பேரூராட்சியில் இலவச கால்நடை மருத்துவ முகாம்

தக்கலை, நவ. 1: திருவிதாங்கோடு பேரூராட்சியில் தமிழக அரசின் இலவச கால்நடை மருத்துவ முகாமை பத்மநாபபுரம் எம்எல்ஏ தியோடர் ரெஜினால்டு திங்கள்கிழமை தொடக்கிவைத்தார்.

திருவிதாங்கோடு பேரூராட்சிக்கு உள்பட்ட பரைக்கோட்டில் நடைபெற்ற இம் முகாமில் வார்டு உறுப்பினர் எம்.எம். மாஹின், கால்நடைப் பராமாரிப்புத் துறை உதவி இயக்குநர் டாக்டர் சந்திரமோகன், டாக்டர் சலீம், ஊர்த் தலைவர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

முகாமில், மாடுகளுக்கு சினைப் பரிசோதனை, செயற்கை முறையில் கருவூட்டல், குடல்புழு நீக்கம், ஆடு, கோழிகளுக்கு தடுப்பூசி உள்ளிட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.

முகாமில், அழகியமண்டபம், திருவிதாங்கோடு, மணலி, விலவூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் தங்கள் கால்நடைகளுடன் பங்கேற்றனர்.

முன்னதாக சிறந்த முறையில் கன்றுகளைப் பராமரித்தோருக்கு தியோடர் ரெஜினால்டு எம்எல்ஏ பரிசுகள் வழங்கிக் கௌரவித்தார்.