தினமணி 02.11.2010
குழித்துறை நகராட்சியில் உள்ளாட்சி தின விழா
மார்த்தாண்டம், நவ. 1: குழித்துறை நகராட்சியில் உள்ளாட்சி தின விழா நடைபெற்றது. விழாவுக்கு நகர்மன்றத் தலைவர் பொன். ஆசைத்தம்பி தலைமை வகித்தார். நகராட்சி பொறியாளர் ரமேஷ், சுகாதார ஆய்வாளர் காளிமுத்து மற்றும் நகராட்சி ஊழியர்கள், நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இதில், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பெண்கள் மகப்பேறு நலத்திட்டத்தின் மூலம் 20 கர்ப்பிணிகளுக்கு தலா ரூ. 6000 வீதம் வழங்கப்பட்டது. நகர்மன்ற துப்புரவுப் பணியாளர்களுக்கு சீருடைகள் வழங்கப்பட்டன.