தினமணி 02.11.2010
மேட்டுப்பாளையம் நகராட்சி சார்பில் உள்ளாட்சி தினவிழா
மேட்டுப்பாளையம், நவ. 1: மேட்டுப்பாளையம் நகராட்சி சார்பில் உள்ளாட்சி தினவிழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, நடைபெற்ற பேரணிக்கு நகரமன்ற துணைத் தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்து, பேரணியை துவக்கி வைத்தார். நகராட்சிப் பொறியாளர் இளங்கோவன் முன்னிலை வகித்தார்.
நகர் நல அலுவலர் பிரதீப் கிருஷ்ணகுமார் வரவேற்றார். பேரணி உதகை சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகள் வழியாக சென்று நகராட்சி அலுவலகத்தை அடைந்தது. நகரமைப்பு அலுவலர் அன்பு, கண்காணிப்பாளர் அன்வர், சுகாதார ஆய்வாளர்கள் நல்லுசாமி, சரவணன், செல்வராஜ், செந்தில்குமார் உட்பட மகாஜன மேநிலைப் பள்ளி, மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், மகளிர் சுய உதவிக் குழுவினரும் கலந்து கொண்டனர். பேச்சு மற்றும் கோலப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு நகரமன்ற துணைத் தலைவர் ஆறுமுகம் பரிசுகளை வழங்கினார். நகராட்சி உதவியாளர் ஜெயராமன் நன்றி கூறினார்.