தினமணி 02.11.2010
வெள்ளக்கோவிலில் உள்ளாட்சி தின விழா
வெள்ளக்கோவில், நவ. 1: வெள்ளக்கோவில் (மூன்றாம் நிலை) நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ளாட்சிகள் தினவிழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு நகர்மன்றத் தலைவர் கே.சாந்தி தலைமை வகித்தார். செயல் அலுவலர் வி.சோமசுந்தரம் முன்னிலை வகித்தார். இப்பகுதியிலுள்ள அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, பொதுஅறிவுப் போட்டிகள் நடத்தப்பட்டு, சிறப்பிடம் பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.