Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பள்ளபட்டி பேரூராட்சியில் உள்ளாட்சி தின விழா

Print PDF

தினமணி            02.11.2010

பள்ளபட்டி  பேரூராட்சியில் உள்ளாட்சி தின விழா

அரவக்குறிச்சி, நவ. 1: பள்ளபட்டி பேரூராட்சியில் உள்ளாட்சி தின விழாவை முன்னிட்டு மரக் கன்றுகள் நடும் விழா, கொசு ஒழிப்பு விழிப்புணர்வு பற்றிய துண்டுப் பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

பள்ளபட்டி பேரூராட்சித் தலைவர் டி.எம். தோட்டம் பசீர் அகமது தலைமை வகித்தார். துணைத் தலைவர் ஜே.கே. அப்துல்பாரி, பேரூராட்சி செயல் அலுவலர் ஆர்.பி. சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பேரூராட்சி தலைவர் தோட்டம் பசீர்அகமது தலைமையில் மரக்கன்றுகள் நடப்பட்டு, பேரூராட்சியில் உள்ள 18 வார்டு பகுதிகளிலிலும் கொசு ஒழிப்பு விழிப்புணர்வு பற்றிய துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டன