தினமணி 02.11.2010
கொடைக்கானலில் உள்ளாட்சிகள் தின விழா
கொடைக்கானல், நவ. 1: கொடைக்கானல் நகராட்சி சார்பில் உள்ளாட்சிகள் தின விழா நகர்மன்ற வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. நகர்மன்றத் தலைவர் முகமது இப்ராஹிம் தலைமை வகித்தார். ஆணையாளர் ராஜன் முன்னிலை வகித்தார். நகராட்சி பொறியாளர் ராஜாராம் வரவேற்றார். கொடைக்கானலில் நடைபெற்ற சாதனைகளைப் பற்றி நகர்மன்றத் தலைவர் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் பேசினர்.
நிகழ்ச்சியில் நகர்மன்றத் துணைத் தலைவர் செல்லத்துரை, உறுப்பினர்கள் பாலசுப்பிரமணி, சின்னு, தீனதயாளன், ராஜ்குமார், முஸ்தபா, நாகராஜ், ஆல்பர்ட், ஆஷா ரவீந்திரன், சலேத் மேரி, தன்சிலா பானு, மேரி கிருஷ்ணன் மற்றும் நகராட்சி அதிகாரிகள், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஆரோக்கியசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.