தினமணி 02.11.2010
உள்ளாட்சி தின விழா
மானாமதுரை, நவ. 1: மானாமதுரையில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் உள்ளாட்சி தின விழா கொண்டாடப்பட்டது.
இதையொட்டி பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. இதில் செயின்ட் ஜோசப் மெட்ரிக். பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
பள்ளி வளாகத்திலிருந்து புறப்பட்ட இப் பேரணியை பேரூராட்சித் தலைவர் ராஜாமணி தொடங்கி வைத்துப் பேரணியில் பங்கேற்றார். துணைத் தலைவர் ஜோசப்ராஜன், செயல் அலுவலர் மருது, கவுன்சிலர் சோமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பேரூராட்சி அலுவலகத்தில் பேரணி முடிவடைந்து. அலுவலகத்தில் மாணவ, மாணவிகளுக்கு உள்ளாட்சியின் சிறப்புகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து சுகாதார ஆய்வாளர் தங்கத்துரை விளக்கிக் கூறினார்.