தினமணி 02.11.2010
தருமபுரி நகராட்சியில் உள்ளாட்சி தின விழா
தருமபுரி, நவ. 1: தருமபுரி நகராட்சியில் திங்கள்கிழமை உள்ளாட்சி தினவிழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு, நகர்மன்றத் தலைவர் டி.சி.பி.ஆனந்தகுமார ராஜா தலைமை வகித்தார். ஆணையாளர் அண்ணாதுரை, பொறியாளர் ஜெகதீஸ்வரி, நகர்மன்ற உறுப்பினர்கள் வி.முருகேசன், இரா.வேணுகோபால், மாது, ஜெயந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதைத்தொடர்ந்து, நகர்மன்ற உறுப்பினர்கள், அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் பங்கேற்ற உறியடித்தல், இசை நாற்காலி உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன