Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நகராட்சி பணியாளர் 375 பேருக்கு சீருடை

Print PDF

தினகரன்                 04.11.2010

நகராட்சி பணியாளர் 375 பேருக்கு சீருடை

கும்பகோணம், நவ.4: தீபா வளி பண்டிகையையொட்டி கும்பகோணம் நகராட்சியில் பணியாளர்களுக்கு ரூ. 2.87 லட்சம் மதிப்பில் சீருடைகள் வழங்கப்பட்டன.

கும்பகோணம் நகராட்சியில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்களில் 182 ஆண் கள், 123 பெண்கள், 28 வாகன ஓட்டுநர்கள், 22 துப் புரவு மேற்பார்வையாளர் கள், 11 அலுவலக உதவியாளர்கள், 9 மகப்பேறு உதவியாளர்கள் உட்பட 375 பேரு க்கு ரூ. 2.37லட்சம் மதிப்பில் ச¦ருடைகளும், தையற்கூலி ரூ.50 ஆயிரத்தையும் நேற்று நகராட்சி அலுவலகத்தில் நகர்மன்ற தலைவர் தமிழழகன் வழங்கினார். துணைத் தலைவர் தர்மபாலன், உறுப்பினர்கள் சுந்தரபாண்டியன், வாசுதேவன், காமேஷ், கணேசன், ஆணையர் வரதராஜன், நகர்நல அலுவலர் சுப்பிரமணி, நகரமைப்பு அலுவலர் பாஸ்கரன் மற்றும் நகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.