தினகரன் 04.11.2010
உள்ளாட்சி தினவிழா விளையாட்டு போட்டி வென்றோருக்கு பரிசு
பெரம்பலூர், நவ. 4: உள்ளாட்சி தினவிழாவையொட்டி பெரம்பலூர் நகராட்சியில் கவுன்சிலர், அலுவலர், துப்புரவு பணியாளர்களுக்கான விளையாட்டு போட்டி நடந் தது.
தமிழக உள்ளாட்சி மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சரும், துணை முதல்வருமான ஸ்டாலின் உத்தரவுப்படி ஒவ்வொரு ஆண்டும் நவம்பர்மாதம் உள்ளாட்சி தினவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.
பெரம்பலூர் நகராட்சியில் உள்ளாட்சி தினவிழா கடந்த 1ம் தேதி நடந்தது. இதையொட்டி சுகாதார விழி ப்புணர்வு பேரணி, துப்புரவு பணியாளர்களுக்கு சீருடை வழங்குதல், மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது. இதன் தொடர்ச்சியாக நேற்று நக ராட்சி கவுன்சிலர்கள், அலுவலர்கள், துப்புரவு பணி யாளர் களுக்கு விளையாட்டு போட்டி மாவட்ட விளை யாட்டு மைதானத்தில் நடந் தது. போட்டிகளை நகராட்சி தலைவர் இளையராஜா துவக்கி வைத்தார். துணைத்தலைவர் முகுந்தன், ஆணையர் சுரேந்திர ஷா முன்னிலை வகித்தனர். கவுன்சிலர்கள் அன்புதுரை, கருணா நிதி, ஜெயக்குமார், ரமேஷ் பாண்டியன், கண்ணகி, சுசீலா, பொற்கொடி கலந்து கொண்டனர்.
ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல், ஈட்டி எறிதல், தட்டு எறிதல், மியூசிக்கல் சேர், கயிறு இழுத்தல் போட்டிகள் நடத்தப்பட்டது. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களு க்கு பரிசு வழங்கப்பட்டது. தீபாவளி பண்டிகையொட்டி நகராட்சியில் பணிபுரிகிற துப்புரவு பணியாளர்களுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கப்பட்டது. v