தினமலர் 04.11.2010
புன்செய்புகளூர் பஞ்.,ல் உள்ளாட்சி தினவிழா
வேலாயுதம்பாளையம்: புன்செய் புகளூர் டவுன் பஞ்சாயத்தில் உள்ளாட்சி தினவிழா கொண்டாடப்பட்டது. புன்செய் புகளூர் டவுன் பஞ்சாயத்தில் நடந்த உள்ளாட்சி தினவிழாவுக்கு தலைவர் கல்யாணி தலைமை வகித்தார். துணை தலைவர் அண்ணாவே ல், செயல் அலுவலர் குலோப்துங்கன் முன்னிலை வகித்தனர். கவுன்சிலர்கள் மற்றும் டவுன் பஞ்சாயத்து பணியாளர்கள் பங்கேற்றனர். டவுன் பஞ்சாயத்தின் சுகாதாரத்தை பாதுகாக்கும்பொருட்டு தீபாவளியன்று புகை மாசுகாற்று மற்றும் குப்பை காரணமாக ஏற்படும் அலர்ஜி குறி த்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. குப்பையில்லா நகராக பராமரிக்க உள்ளாட்சி தின விழாவில் பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.