தினமணி 04.11.2010
அரவக்குறிச்சியில் உள்ளாட்சி தின விழா
அரவக்குறிச்சி, நவ. 3: அரவக்குறிச்சி பேரூராட்சி குமராண்டான்வலசு பகுதியில் ஒருங்கிணைந்த துப்புரவு முகாம், உள்ளாட்சி தின விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
அரவக்குறிச்சி பேரூராட்சித் தலைவர் ம. அண்ணாதுரை தலைமை வகித்தார். துணைத் தலைவர் பாம்பே காதர்மைதீன், செயல் அலுவலர் சு. உமாராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
துப்புரவு மேற்பார்வையாளர் ச. மனோகரன் மேற்பார்வையில், குமராண்டான்வலசு பகுதியில் துப்புரவுப் பணியாளர்கள் குப்பைகளை அகற்றினர். அதை பேரூராட்சித் தலைவர், துணைத் தலைவர், உறுப்பினர்கள் பார்வையிட்டனர். பேரூராட்சி உறுப்பினர் சகுந்தலாதேவி, திருக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தொடர்ந்து, கணக்குப்பிள்ளைபுதூர் அரசு தொடக்கப் பள்ளியில் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ம. அண்ணாதுரை திருக்குறள் புத்தகம், பேனா, பென்சில்களை வழங்கினார். பேரூராட்சி உறுப்பினர் கே. சிவசெல்வி, பள்ளித் தலைமை ஆசிரியர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.