தினகரன் 08.11.2010
ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சியில் உள்ளாட்சி தினவிழா
ஸ்ரீவைகுண்டம், நவ.8: ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சியில் உள்ளாட்சி தினவிழா நடந்தது. தலைவர் கந்த சிவசுப்பு தலைமை வகித்தார். கவுன்சிலர் பெருமாள் முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் மணி வரவேற்றார். தொடர்ந்து குமரகுருபர சுவாமிகள் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மற்றும் ஆதி குமரகுருபர சுவாமிகள் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி கள் பங்கேற்ற பேச்சு மற்றும் கவிதைப் போட்டிகள் நடந்தன. வெற்றி பெற்றவர்களுக்கு தலைவர் கந்தசிவசுப்பு பரிசுகளை வழங்கினார். தலைமை எழுத்தர் வேலுச்சாமி நன்றி கூறினார்.