Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சி பணியாளர் சஸ்பெண்ட்

Print PDF

தினகரன்                    10.11.2010

மாநகராட்சி பணியாளர் சஸ்பெண்ட்

திருச்சி, நவ 10: பணியில் மெத்தனமாக இருந்ததாக மாநகராட்சி துப்புரவு மேற்பார்வையாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

திருச்சி மாநகராட்சி 54வது வார்டில் துப்புரவு மேற்பார்வையாளராக பணியாற்றி வருபவர் நாகராஜன். இவர் துப்புரவு பணிகளை சரியாக மேற்பார்வையிடாமல் மெத்தனமாக இருந்ததாக புகார் எழுந்தது. இது குறித்து அதிகாரிகள் எச்சரிக்கை செய்தும் அலட்சியமாக இருந்த காரணத்தால் நாகராஜனை தற்காலிக பணி நீக்கம் செய்து மாநகராட்சி கமிஷனர் பால்சாமி உத்தரவிட்டார். மேலும் துப்புரவு பணி மற்றும் துப்புரவு மேற்பார்வை பணியில் மெத்தனமாக இருக்கும் பணியாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் எச்சரித்துள்ளார்.