Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தாம்பரத்தில் சாலையோர சிறுகடை வியாபாரிகள் 330 பேருக்கு மாற்று இடம் வழங்க ஆய்வு

Print PDF

தினமணி               10.11.2010

தாம்பரத்தில் சாலையோர சிறுகடை வியாபாரிகள் 330 பேருக்கு மாற்று இடம் வழங்க ஆய்வு

தாம்பரம் நவ. 9: சென்னை தாம்பரத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள சாலையோர சிறுகடைகளுக்கு மாற்று இடம் வழங்குவதற்கான கலந்தாய்வுக் கூட்டம் நகர்மன்ற அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது.

நகர்ப்புற சிறுகடை வியாபாரிகளின் நலன் கருதி வகுக்கப்பட்டுள்ள தேசிய கொள்கைக் கோட்பாட்டின்படி, தாம்பரத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக சண்முகம் சாலை உள்ளிட்ட 8 சாலைகளில் சாலையோரக் கடை நடத்தி வரும் சுமார் 330 பேருக்கு மாற்று இடம் வழங்குவது தொடர்பாக கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்தில் பங்கேற்ற சிறுகடை வியாபாரிகள் சங்கப் பிரதிநிதிகள் கோரிய மாற்று இடங்களை நகர்மன்றத் தலைவர் இ.மணி மற்றும் ஆணையர் என்.எஸ்.பிரேமா விரைவில் பரிசீலித்து இடஒதுக்கீடு வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்வதாகத் தெரிவித்தனர்.

கடைகளுக்கான வரைபடம் மற்றும் உறுப்பினர் பட்டியலை ஓரிரு நாட்களில் வழங்க வியாபாரிகள் சங்கப் பிரதிநிதிகள் ஒப்புக் கொண்டனர்.

இதுபற்றி அன்னை இந்திரா சிறுவியாபாரிகள் சங்கத்தின் தலைவர் கே.எம். யூசுப் கூறியதாவது:

தாம்பரத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சாலையோரங்களில் சிறுகடைகள் வைத்து வாழ்க்கை நடத்தி வரும் சுமார் 330 பேருக்கு அரசு ஒதுக்கீடு செய்யும் இடத்தில் நிலையாக இருந்து வியாபாரம் செய்யும் வாய்ப்பு விரைவில் கிடைக்கும் என்றார்.

கலந்தாய்வுக் கூட்டத்தில் தாம்பரம் நகர்மன்றத் தலைவர் இ.மணி, ஆணையர் என்.எஸ்.பிரேமா, காவல்துறை உதவி ஆணையர் முத்தமிழ்மணி, சிறுகடை வியாபாரிகள் சங்கப் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.