Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சீரமைப்பு பணிகள் இன்று துவக்கம் அண்ணா பஸ் நிலைய கடைகள் வடசேரிக்கு இடம் மாறுகிறது

Print PDF

தினகரன்                   15.11.2010

சீரமைப்பு பணிகள் இன்று துவக்கம் அண்ணா பஸ் நிலைய கடைகள் வடசேரிக்கு இடம் மாறுகிறது

நாகர்கோவில், நவ.15: நாகர்கோவில், மீனாட்சிபுரம் அண்ணா பஸ் நிலையம் ரூ1.25 கோடி மதிப்பீட்டில் சீரமைக்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் தொடக்க விழா இன்று (15ம் தேதி) காலை நடக்கிறது. இதனை முன்னிட்டு அங்கு வரும் அனைத்து பஸ்களும் வடசேரி கிறிஸ்டோபர் பஸ் நிலையத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுபோன்று அண்ணா பஸ் நிலையத்தில் செயல்பட்டு வரும் நகராட்சி கடை களையும் வடசேரி பஸ் நிலையத்திற்கு மாற்றுவது தொடர்பாக நகராட்சி சேர்மன் அசோகன் சாலமன், ஆணையர் ஜானகி ரவீந்திரன் மற்றும் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். இதனை தொடர்ந்து 48 கடைகளும் தற்காலிக இடமாற்றம் செய்யப்பட உள்ளன. பஸ் நிலைய சீரமைப்பு பணிகள் முடிந்த பின்னர் கடைகள் வழக்கம்போல் அண்ணா பஸ் நிலையத்தில் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி சேர்மன் அசோகன் சாலமன் தெரிவித்தார்.

அண்ணா பஸ் நிலையம் சீரமைக்கப்படுவதையொட்டி வடசேரி பஸ் நிலையத்தில் பஸ்களை நிறுத்துவதற்கான இடத்தை நகர்மன்ற தலைவர் அசோகன் சாலமன் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர்.