தினமணி 16.11.2010
நகராட்சி பள்ளியில் குழந்தைகள் தின விழா
மானாமதுரை, நவ. 15: சிவகங்கை நகராட்சி நடுநிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா நடைபெற்றது. விழாவுக்கு உதவி தொடக்கக் கல்வி அலுவலர் மைக்கேல்ராஜ் தலைமை வகித்தார். கூடுதல் தொடக்கக் கல்வி அலுவலர் ஜோசப் அடைக்கலராஜ் முன்னிலை வகித்தார். தலைமையாசிரியை மரியசெல்வி வரவேற்றார்.
விழாவில் பள்ளிக் கல்விக்குழுத் தலைவர் சரவணன் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். பள்ளிக் குழந்தைகளுக்கு பேச்சு, மாறுவேடம், ரங்கோலி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றிபெற்ற குழந்தைகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.