Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சாலையில் நடமாட்டம் ஆடுகளுக்கு அபராதம்

Print PDF

தினகரன்                 18.11.2010

சாலையில் நடமாட்டம் ஆடுகளுக்கு அபராதம்

குன்னூர், நவ.18:போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் ஆடுகளை நடமாடவிட்ட உரிமையாளர்களுக்கு ரூ.1250 அபராதம் விதிக்கப்பட்டது.போக்குவரத்துக்கு இடையூறாக கால்நடைகள் சாலையில் நடமாட விடக்கூடாது என்று குன்னூர் நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றி அதிகாரிகள் கண்காணித்து வந்தனர். இந்நிலையில் குன்னூர் மவுண்ட் பிளசன்ட் பகுதியில் நேற்று காலையில் 11 ஆடுகள் சாலையின் குறுக்கே அலைந்தன. இதனால் சாலை போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் செந்தில்குமார், ஞானசேகரன், துப்புரவு மேற்பார்வையாளர்கள் குமார், தண்டபாணி ஆகியோர் சம்பவ பகுதிக்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது சாலையில் ஆடுகள் நடமாடியது கண்டுபிடிக்கப்பட்டது. ஆடுகளை பிடித்து நகராட்சிக்கு சொந்தமான தொண்டுபட்டியில் அடைக்க முயற்சி மேற்கொண்டனர்.அப்போது ஆட்டின் உரிமையாளர்கள் அங்கு வந்து நகராட்சி அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்தனர். இதையடுத்து ஆட்டின் உரிமையாளர்களுக்கு மொத்தம் ரூ.1250 அபராதம் விதிக்கப்பட்டது.